Friday, 29 January 2016

அனைத்தும் உலக நலனுக்காகவே : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.

உலகத்தில் வசித்துலாவும் மாந்தர்களே ! இப்பதிவில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் உலக நலனுக்காகவே என்று கூறலாம். உலகத்தில் வாழும் 84 லட்சம் ஜீவராசிகளுக்கும் 4448 வியாதிகள். இந்த வியாதிகளுக்காக இறைவன் 20 லட்சம் மூலிகைகளை படைத்துள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எமதர்மன் நம்மைத் தேடிவந்தான். ஆனால் இப் பொழுது நாம் அவனைத் தேடி சென்று கொண்டு இருக்கிறோம். அது எவ்வாறு என்று பார்க்கலாம்.

           சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆறு மாதகாலம் வரை நெல் விளையும் என்பதால் மக்கள் பசியுடன் வாழ்ந்தனர். ஆனால் நோய் இல்லாமல் இருந்தனர். இப்பொழுது மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும் , ரசாயன மருந்துகளின் காரணமாகவும் விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு காரணமாகவும் நெற்பயிர் மூன்றேமாதத்தில் விளைந்து விடுகின்றது. அதனால் மக்கள் இப்பொழுது பசி இல்லாமல் வாழ்கின்றனர். ஆனால் நோயுடன் இருக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் மூன்று நாட்கள் ஆனாலும் சாதம் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். ஆனால் இப்பொழுது சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் மறு நாள் சாதம் நொந்து போய்விடுகின்றது. தண்ணீர் ஊற்றி வைத்த சாதமே அப்படியென்றால் சாதத்தை சாப்பிடும் நமது உடல் எந்த அளவுக்கு பழுதடைந்து போகும் என்பதை நீங்களே உணர்வீர்கள்.  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு குதிரைவாலி , கேழ்வரகு , சாமை , வரகு , தினை , கம்பு , சோளம் போன்ற நவதானியங்களை உணவாக உட்கொண்டார்கள்.

            ஆகையால் எந்தப் பிணியும் அவர்களை அணுகவில்லை. இப்பொழுது சிறு வயதிலேயே சர்க்கரை வியாதி, மாரடைப்பு சிறுநீரகப் பழது. டெங்கு காய்ச்சல் , சிக்கன்குனியா , கண்வலி , கண்பார்வை குன்றுதல் போன்ற  பல்வேறு நோய்கள் கவ்விக் கொண்டதை நம் கண் முன்னே பார்க்கிறோம். இவை அனைத்தையும் மக்கள் பார்த்து உணர ஆரம்பித்து விட்டார்கள். சித்தர்களால்  உருவாக்கப்பட்ட சித்த மருத்துவம் பக்கம் திரும்ப ஆரம்பித்து விட்டார்கள்.

             ஆங்கில மருந்து , ஹோமியோபதி , அலோபதி ,
போன்ற மருந்துகள் அனைத்தும் நோய் வந்த பின்பு தான் சாப்பிட முடிகிறது. ஆனால் நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டு நோய் வராமல் கட்டுப்படுத்தும் மருந்து சித்தர்களால் கண்டறியப்பட்ட சித்த மருந்துவ மூலிகைக்கு மட்டுமே உண்டு.ஆகையால்தான் இதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் அதிக அளவு விலை கொடுத்து வாங்கி பயன்பெறுகின்றனர்.

          வெளிநாட்டில் இருக்கும் பறவைகளும் பறந்து வருகின்றன. நம் நாட்டு வேடந்தாங்கலுக்கு பல வகையான கனிகளைக்  கொடுக்கும் மரங்களும் உரோம விரிட்சகம் உள்ளிட்ட அனேக விரிட்சகங்கள் நம் நாட்டில் இருப்பதால் பறவைகளும் இங்கு வந்து தனது இனத்தைப் பெருக்கிச் செல்கின்றது.

         உலகத்திலேயே புனிதமான நாடு நம் நாடுதான். அது எவ்வாறென்று கூறுகிறேன். 6 மணி முதல் மாலை 6 மணி வரை சூரியன் தெரியக்கூடிய ஒரே நாடு நம் நாடு மட்டுமே.

            எத்தனையோ நாடுகளில் மதியம் இரண்டு மணி நேரம் மட்டுமே சூரியன் தெரியக்கூடிய நாடும் உண்டு. சில நாடுகளில் சூரியனே தெரிவதில்லை. இரவும் பகலும் இருட்டாகவே உள்ளது. சில நாடுகளில் அமில மழையும் பொழிகின்றது. சில நாடுகளில் கந்தக பூமி இருப்பதால் அந்த நாட்டில்  குழந்தை கருவில்  தங்காது. அவர்கள் நம் நாட்டிற்கு வந்து குழந்தையை பெற்றெடுத்துச் செல்கின்றனர். இப்படி அயல் நாட்டில் உள்ளவர்கள் நம் நாட்டின் பெருமையை உணர்ந்து இங்கு வந்து செல்கின்றனர்.

கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார் :

              ஒரு குளத்தில் தாமரை உண்டு. அந்த குளத்தில் மீன்களும் உண்டு , தவளைகளும் உண்டு. ஆனால் தாமரைப்பூவின் அருமையை மீன்களும் , தவளைகளும் உணரவில்லை . எங்கோ இருந்து வந்து வண்டுதான் சுவைத்து மகிழ்கின்றது. அதே போல் நம் நாட்டின் பெருமையை நாம் உணரவில்லை எங்கிருந்தே வந்த ஆங்கிலெயர்கள்தான் உணர்ந்து மகிழ்ந்து செல்கின்றார்கள். இந்த பதிவை பார்த்தாவது. அனைவரும் உணர்வீர்கள் என்று நம்புகிறோம். எந்த நாடுகளிலும் சித்தர்கள் வாழவில்லை. ஆனால் நம் நாட்டில் அனேக ரிஷிகளும் , சித்தர்களும் , யோகிகளும் , ஞானிகளும் , மகான்களும் , 63 நாயன்மார்களும் வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் பிறந்த இந்த மண்ணில் நாம் பிறந்து இருக்கிறோம் என்றால் மிக பாக்கியம் செய்தவர்கள் அல்லவா. பின் வரும் சந்ததிகளுக்காக அவர்கள் விட்டு சென்ற மூலிகைகளையும் ஓலைச் அவடிகளையும் காப்பது நமது கடமை அல்லாவா !

            முந்தைய பதிவிலும் இனி வரும் பதிவில் மூலிகைகளை மிகத் தெளிவாக அதுவும் உங்கள் வீட்டின் அருகே கிடைக்கும் மூலிகைகளை மட்டும் கூறியிருக்கிறோம். வாஸ்துவை பற்றியும் கூறியிருக்கிறோம். வர்மக்களை பற்றி கூறியிருக்கிறோம். " நமசிவாய " மந்திரம் எங்கு இருந்து தோன்றியது என்பதைப் பற்றி கூறியிருக்கிறோம். குண்டலினிகளையும் அஷ்டமாசித்தைப் பற்றியும் கூறியிருக்கிறோம். மூச்சுப் பயிற்சி பற்றி இதுவரை யாரும் கூறாத செய்தியைக் கூறியுள்ளோம். குழந்தை கிடைப்பதற்கான  வழியையும் கூறியிருக்கிறோம். சிறு நீரகம் எவ்வாறு பாதிப்படைகின்றது என்பதைப் பற்றியும் கூறி இருக்கிறோம். இன்னும் பற்பல விஷயங்களையும் கூறியுள்ளோம். அனைத்து மூலிகைகளைப் பற்றியும் சுருக்கமாக விளக்கி எளிய முறையில் உங்களுக்கு கிடைக்கும் வகையில் கூறியிருக்கிறோம். இதில் கூறப்பட்ட அனைத்து மூலிகைகளையும் எங்கள் அனுபவத்தில் மக்களுக்கு கொடுத்து குணமான மூலிகையை மட்டுமே உங்களுக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளோம். புண்ணியம் செய்தவர்கள் கையில் மட்டுமே இப்பதிவு கிடைக்கும் என்பதே உண்மை.

             இப் பதிவை படித்த பிறகாவது சித்த மருத்துவத்தின் மகிமையை உணர்வீர்கள் என்று நம்புகிறோம். மேலும் , தற்போது ஆங்கில மருத்துவ முறையிலிருந்து சித்த மருத்துவத்திற்கு மக்கள் மாறி வருகின்றனர் . மக்கள் முழுவதுமாக சித்த மருத்துவ முறைக்கு திரும்புகின்ற காலம் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் திரும்புவீர்கள்  என முழுமையாக நம்புகிறோம். இந்த பதிவை பார்த்தவனே " மாபெரும் " சித்தனாவான் " .

இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

                           * * * * * * *
           

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home